articles

img

பேதமற்று வாழ்க (கோவி.பால.முருகு)

ஏடுபுகழ் கொண்டதுநம் நாடு-அது    

எண்ணற்ற மொழிவழங்கும் வீடு-

தினம் பாடுபுகழ் பண்பாடு கலைகள் -

இவை     பயிலுகின்ற பன்முகத்தின் விலைகள்!

  போர்முகத்தில்  விடுதலையின் காற்று-

தியாகப்     பொலிவுடனே  பெற்றதையேப் போற்று

-மத வேர்முகத்தில்  ஒற்றுமைக்கு இடையூறு

-அதை       வேரறுக்க வேண்டியதை  நீகூறு!  

 ஏழைகளை  ஏமாற்றும்  ஆட்சி-கார்ப்பரேட்      

ஏற்றம்பெற  அள்ளித்தரும் காட்சி-

மதப் பீழைகளை அரங்கேற்றும் கட்சி-ஒற்றுமையைப்        

பின்னுக்குத் தள்ளிவிடும் சூழ்ச்சி!  வெங்காயம்  

என்பதொன்றிய அரசு!  -தோல்    

உறித்திடின்  ஏதுமற்ற  தரிசு!-மாநிலம் பங்கிடின்  

என்னவாகும்   நாடு-அது  

  பலநூறு சுக்காகும் கூடு!  கடவுள்மதம்  

இவர்கள்தனிச்  சொத்தா?-அதில்    

கலகம்செயும்  வேலைதான்

  சத்தா!-மதக் கடவுளிலும்  

வேற்றுமையைக்  காட்டும்- உண்மைக்      

கடவுளையே அறியாமல் முட்டும்!  

கருணையிலா  ஆட்சியதை  ஒழித்திடு! -

மக்கள்      கவலையைக்  காணுமாட்சி எழுப்பிடு! -

நாட்டை  அருள்நயந்த சன்மார்க்கர் ஆளட்டும்!-உயிர்    

  அத்துணையும்  பேதமற்று வாழட்டும்!